தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி!

தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு பிரதமர் மோடி நன்றி!

பிரதமர் மோடி- சீன அதிபர் இருவரும் கடந்த 11, 12ந்தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி தமிழ் கலாச்சார உடையான வேட்டி சட்டையை அணிந்து இருந்தார். அப்போது மாமல்லபுரம் தொடர்பான கவிதை ஒன்றை பிரதமர் எழுதியுள்ளார்.  இந்த கவிதையின் தமிழ் மொழி பெயர்ப்பை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடி தமிழ் மொழி மீது கொண்டுள்ள பற்று குறித்து தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதற்கான பதிவில், 'உலகின் பழமையான மொழியின் கலாசாரத்தில் என்னை வெளிப்படுத்தி கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழ் மொழி மிகவும் அழகானது. தமிழ் மக்கள் மிகவும் தனித்துவமானவர்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
Read More
ஜனனிக்கு பாராட்டு விழா நடத்திய பிரம்மா குமாரிகள் சங்கம்!

ஜனனிக்கு பாராட்டு விழா நடத்திய பிரம்மா குமாரிகள் சங்கம்!

ஐந்து வயதிலிருந்து இசை பயிற்சி பெற்று இளம் வயதிலேயே பாடகி, இசை தொகுப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் எஸ்.ஜே.ஜனனி. கர்நாடக, இந்துஸ்தானி, பஜன் என இசையில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். பாலமுரளி கிருஷ்ணாவின் மாணவியான இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடை கச்சேரிகளை நடத்தியுள்ளார். பிரபா என்கிற படத்திற்கும் இசையமைத்துள்ளார். இளமணி விருது, தேசிய விருது, தமிழக அரசு விருது, சமீபத்தில் கூட கலைமாமணி விருது என இந்திய விருதுகள் பலவற்றுக்கு சொந்தக் காரர் இந்த எஸ்.ஜே.ஜனனி. தற்போது இவரே இசையமைத்து பாடிய, புதிய உலகம் மலரட்டுமே என்கிற பாடலுக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் “க்ளோபல் பீஸ் சாங் விருதுகள்” (Global Peace Song Awards) அமைப்பு “உலக அமைதிப் பாடல் விருதினை வழங்கியுள்ளது. உலகெங்கும் அமைதியை பரப்பும் விதமாக நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பாடல்கள் பங்கு…
Read More
சர்வதேச விழாக்களில் கலந்துகொள்ளத் தயாராகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

சர்வதேச விழாக்களில் கலந்துகொள்ளத் தயாராகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..!

பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர் நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர். தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல மலையாள திரைப்பட இயக்குநர்கள் ஐ.வி.சசி மற்றும் தம்பி கண்ணன் தானம் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். போர் மூளும் சூழலில் இலங்கையிலிருந்து தமிழகம் வந்து உறவினர் வீட்டில் தனது மகளை ஒப்படைத்துவிட்டுச் செல்வதற்காக மகளுடன் தமிழகம் வருகிறார் தந்தை. ஆனால் உறவினர்கள் அவரது மகளை தங்களுடன் வைத்துக்கொள்ள மறுத்துவிட தந்தையும் மகளும் தெருவில் தங்கும் சூழல் ஏற்படுகிறது.  அப்படிப்பட்ட சூழலிலும் தாங்கள்  பறவைகள் போல சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் மனநிலைக்கு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள் இந்த இருவரும். இந்த சூழ்நிலையிலும் ஒரு தந்தை தனது…
Read More
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தில் செளகார் ஜானகி!

ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்தில் செளகார் ஜானகி!

பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலைக் கேட்டால் நம் நினைவுக்கு வருவது சௌகார் ஜானகி தான். தெலுங்கில் ‘சௌக்காரு’ என்ற படத்தில் என்.டி.ராமாராவுக்கு ஜோடியாக அறிமுக மானார். அதன் பிறகு ஜானகி என்ற பெயருக்கு முன் ‘சௌக்காரு’ என்ற பெயரை இணைத்து ‘சௌக்கார்’ ஜானகி என்று அழைக்கப்பட்டார். 1952-ம் வருடம் ‘வளையாபதி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ் திரைப்படத்தில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், ஜெமினி கணேசன், நாகேஷ், ஸ்ரீகாந்த், ஏ.வி.எம். ராஜன் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருந்தாலும் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஸ்ரீகாந்த் ஆகிய மூவருடன் தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சிவாஜி கணேசனுடன் நடித்த ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடலில் அனைவரின் மனதையும் கவர்ந்தார். அந்த பாடல் இவருக்கு…
Read More
விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படும்  ஃபேஷன் ஷோ!

விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படும் ஃபேஷன் ஷோ!

ஃபேஷன் உலகில் தலைசிறந்த முன்னணி அமைப்பாக விளங்கும் PRAAWOLION EVENTZ சென்னையில் சமுகநல நோக்கத்துடன் மிகப்பெரும் ஃபேஷன் ஷோ  "PRAWLION FASHION WEEK"  ஒன்றை சென்னையில் அரங்கேற்றுகிறது. ஃபேஷன் உலகின் மிகப்பெரும் டிசைனர்கள், திறமையாளர்கள் கலந்து கொள்ளும் இவ்விழா விவசாயிகளின் நலனை முன்னிட்டு நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு ஷோ நடத்தும் அமைப்பாளர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். பன்முக திறமையாளர்,  நடிகர் பிரபாகரன் PC பேசியது... ஃபேஷன் உலகை பொறுத்தவரை சென்னை எப்போதும் திறமையாளர்களுக்கு முக்கியமான தளமாக இருக்கிறது. இங்கு நிறைய புதுமைகளும் திறமைகளும் அரங்கேறி வருகிறது. அதில் PRAAWOLION EVENTZ மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாங்கள் நடத்த உள்ள இந்த ஃபேஷன் விழாவின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் இதன் மூலம் கிடைக்கும் தொகையை விவசாயிகளின் நலனுக்கு அளிக்கப்பட உள்ளது என்றார். ஃபேஷன் ஒருங்கிணைப்பாளர் கருன் ராமன் கூறியதாவது... இது எங்களுக்கு ஒரு குடும்ப விழா போன்றது. இந்நேரத்தில் எங்களுடன்…
Read More
நான் நடிச்ச கைதி-யையும் பாருங்க.. பிகில்-ஐயும் பாருங்க – நரேன் பேட்டி!

நான் நடிச்ச கைதி-யையும் பாருங்க.. பிகில்-ஐயும் பாருங்க – நரேன் பேட்டி!

கார்த்தி நடிப்பில் தீபாவாளிக்கு வெளியாகும் கைதி பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. வெளியீட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ரசிகர்கள் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். அஞ்சாதே புகழ் நரேன் படத்தில் இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு  முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஒரு சிறு நேர் காணல்… தமிழில் சில காலமாக நீங்கள் படம் செய்யவில்லையே ஏன் இந்த இடைவெளி ? தெரியவில்லை திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை நல்ல படத்திற்காக காத்திருந்தேன். நான் கடைசியாக நடித்த படம் யூ டர்ன். அதற்குப்பிறகு அதர்வாவுடன் ஒத்தைக்கு ஒத்தை படத்துல ஒரு கேரக்டர் நடிச்சுருக்கேன். ஃபிளாஷ்பேக்ல ஹீரோ மாதிரி ரத்தினம்னு ஒரு கேரக்டர். சுசீந்தரன் சாரோட சாம்பியன் படத்தில நடிச்சுருக்கேன் இரண்டும் ரெடியாகிட்டு இருக்கு. இது போன வருஷத்துல பண்ணினது. எனக்கே ஆச்சர்யம்  கைதி தான் பெரிய படம். எனக்கு ஒரு செகண்ட் இன்னிங்ஸ்ஸா இந்தப்படம் இருக்கும்னு தோணுது. கார்த்தி இந்தப்படத்தில கைதி நீங்க…
Read More
ராஜாவுக்கு செக் படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

ராஜாவுக்கு செக் படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

பல்லாட் கொக்காட் பிலிம் ஹவுஸ் சார்பில் மலையாள திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ள படம் ‘ராஜாவுக்கு செக்.. மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா சுண்டாட்டம், ஆகியோருடன் விஜய் டிவி புகழ் இர்பான் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார். ஒட்டுமொத்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு நேற்று மாலை விழா நடைபெற்றது.…
Read More
தமிழ் சினிமாவை அழிக்கும் பஞ்ச பாண்டவர் அணி-! சுரேஷ் காமாட்சி ஆவேசம்!

தமிழ் சினிமாவை அழிக்கும் பஞ்ச பாண்டவர் அணி-! சுரேஷ் காமாட்சி ஆவேசம்!

'மிக மிக அவசரம்' படத்துக்குத் திரையரங்குகள் தர மறுப்பு தெரிவித்து இருப்பதற்குத் தயாரிப்பாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்துள்ள படம் 'மிக மிக அவசரம்'. நேற்று (அக்டோபர் 11) இந்தப் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், வெறும் 17 திரையரங்குகள் மட்டுமே கிடைத்ததால் படத்தின் வெளியீட்டைத் தள்ளிவைத்துள்ளது படக்குழு. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ள ரவீந்திரன் சந்திரசேகரன், 'மிக மிக அவசரம்' வெளியீடு தொடர்பான தன் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் மிக மிக அவசரம் படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி, ““எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை.. பெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..? கடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி…
Read More
“தனுஷு ராசி நேயர்களே” ! – அப்டேட் ரிப்போர்ட்!

“தனுஷு ராசி நேயர்களே” ! – அப்டேட் ரிப்போர்ட்!

படம் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது…. சரியாக திட்டமிடுதலும் அதை தெளிவாக நடைமுறைப்படுத்து வதுமே குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் காரியத்தையும் முடிக்கும் மந்திரம் ஆகும். சினிமா படப்பிடிப்பும் அப்படியே. ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் தனுஷு ராசி நேயர்களே படக்குழு இந்த திட்டமிடுதலுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அவர்கள் திட்டமிட்டபடியே படப்பிடிப்பை மிக விரைவாக முடித்து, தற்போது படப்பின்னணி வேலைகளை ஆரம்பித்துவிட்டது. படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாங்கள் திட்டமிட்டபடியே, படக்குழுவின் அயராத உழைப்பில் சூட்டிங்கை முடிதிருக்கிறோம். புதுமுக இயக்குநரான எனக்கு கோகுலம் கோபலன் சார் மாதிரியான தயாரிப்பாளர் கிடைத்தது வரமென்பேன். படத்தின் சூட்டிங்கிற்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் முன்னதாகவே தயார் செய்து தந்து, கேட்ட அனைத்தையும் கொடுத்து சூட்டிங் மிக விரைவாக, தடையற நடந்ததற்கு முழுமுதல் காரணம் அவர் தான். நாங்கள் இப்போது படத்தின் டப்பிங் வேலைகளை துவக்கி உள்ளோம். படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் முன்னதாகவே…
Read More
கோமாளி வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? – ஜெயம் ரவி

கோமாளி வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? – ஜெயம் ரவி

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிப்பில் புதுமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள படம் “கோமாளி”. இந்தாண்டில் வெளியான படங்களில் “கோமாளி” படம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது மனங்களையும் வென்று தற்போதைய தமிழ் திரையுலகில் 50 நாட்களை கடந்து வசூல் சாதனை படைத்து திரையரங்கில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயம் ரவி பலவித தோற்றங்களில் நாயகனாக கலக்க, காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளனர். யோகிபாபு, சாரா, கே எஸ் ரவிக்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா குழு இசையமைத்துள்ளார்கள். இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா தனியார் அரங்கில் பத்திரிக்கையாளர் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இவ்விழாவில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் பேசியது…. “கோமாளி” படம் 50 நாட்களை கடந்து திரையரங்கில்…
Read More