கோவா சர்வதேச திரைப் பட விழா அடுத்தாண்டுக்கு தள்ளி வைப்பு!

கோவாவில் வருடாவருடம் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொரோனா வைரஸ் பரவலை ஒட்டி அடுத்தாண்டு்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது.

மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, சமீப ஆண்டுகளில் கோவாவில் மட்டுமே தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்தத் திரைப்பட விழா தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் 24-ம் தேதிவரை இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.